தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் |
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டடம் கட்டும் முயற்சியை நாசர் தலைமையிலான புதிய நிர்வாகம் துரிதப்படுத்தி உள்ளது. சுமார் 26 கோடி செலவில் அமைக்கப்பட உள்ள இந்த கட்டடம் 4 மாடி கொண்டதாகும். இதில் ஆயிரம் பேர் அமரும் அரங்கம், பிரிவியூ தியேட்டர், உடற்பயிற்சி கூடம், நடன கூடம். எடிட்டிங், டப்பிங், மியூசிக் தியேட்டர்கள். மற்றும் அலுவலகங்கள் கட்டப்பட உள்ளது.
இதற்கான வரைபடம் தயாரித்து சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் அனுமதிக்கு அனுப்பப்பட்டது. தற்போது அதற்கு அனுமதி கிடைத்து விட்டது. இதைத் தொடர்ந்து நேற்று நடிகர் சங்கத்தின் அவசர செயற்குழு கூடியது. பொதுச் செயலாளர் விஷால், துணைத் தலைவர் பொன்வண்ணன் தலைமையில் நடந்த இந்த செயற்குழுவில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அதன்படி வருகிற 31ந் தேதி சங்க கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நடத்துவது. விழாவுக்கு கமல், ரஜினியை அழைத்து முதல் செங்கலை எடுத்து தர வைப்பது. விழாவிற்கு அனைத்து சங்க நிர்வாகிகளை அழைப்பது, உள்ளிட்ட சங்கம் கட்டடம் தொடர்பான பல தீர்மானங்கள் தீர்மானக்கப்பட்டன.